Wednesday 1 August 2012

மக்கள் சேமிப்பு - எல்.ஐ.சி.



N.நாகராஜன்
இணைச்செயலாளர், ICEU

      சுதந்திர இந்தியாவில் மக்களின் சேமிப்பை அர்த்த சாஸ்திரத்திலும் கண்டிராத வகையில் பல வழிகளில் மோசடியில் ஈடுபட்டு கொள்ளையடித்துக் கொண்டிருந்தன தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள். 200க்கும் மேற்பட்ட இத்தகைய நிறுவனங்களை பண்டித நேரு தலைமையிலான காங்கிரஸ் அரசு தேசியமயமாக்கி ரூ.5 கோடியில் 1956ல் துவக்கப்பட்ட நிறுவனம் தான் எல்.ஐ.சி.

      கடந்த 56 ஆண்டுகளாக மக்களின் நன்மதிப்புடன் வளர்ச்சிப்பாதையில் பீடு நடைபோட்டு 30 கோடிக்கும் மேலான பாலிசிதாரர்களைத் தன்னகத்தே கொண்டு ரூ.13 இலட்சம் கோடி சொத்து மதிப்புடன் நெ.1, நிறுவனமாக திகழ்கிறது எல்.ஐ.சி. நாட்டின் ஐந்தாண்டு திட்டங்களுக்காக ரூ.11.75 இலட்சம் கோடிகளையும், அரசு மற்றும் சமூக நல (குடிநீர், சாலைவசதி போன்ற) திட்டங்களுக்கு  ரூ.7.50 இலட்சம் கோடிகளையும் அள்ளித் தந்துள்ளது எல்.ஐ.சி. ஒரு லட்சம் ஊழியர்கள், 13.25 இலட்சம் முகவர்களின் தன்னலமற்ற சேவையால் வளர்ந்துள்ள பொதுத்துறை எல்.ஐ.சி._ஐ ஏகாதிபத்திய நிதி மூலதனத்தின் நெருக்குதலால் தனியாருக்குத் தாரை வார்க்க முயல்கிறது மன்மோகன் சிங் அரசு.

      முந்தைய பாஜக மற்றும் காங்கிரஸ் அரசினால் இன்சூரன்ஸ் துறையில் போட்டி என்ற பெயரில் 26% அந்நிய முதலீட்டுடன் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் செயல்படத் துவங்கின. 24 தனியார் நிறுவனங்கள் இன்சூரன்ஸ் துறையில் நுழைந்தபோதும் பொருளாதார மந்த நிலையிலும் 2011_12ல் ரூ.2,03,358 கோடியை பிரீமியமாகப் பெற்று பாலிசி எண்ணிக்கையில் 81% சந்தை பங்களிப்பை (ஙஹழ்ந்ங்ற் ள்ட்ஹழ்ங்) பெற்று முன்னோடி நிறுவனமாக எல்.ஐ.சி. விளங்குகிறது.

      லஞ்சம் மற்றும் ஊழலற்ற முறையில் 99.48% உரிமங்களை (இப்ஹண்ம்ள்) பட்டுவாடா செய்து மக்களின் மிகவும் நம்பகமான நிறுவனமாக பல்வேறு விருதுகளைப் பெற்று தலைசிறந்த நிறுவனமாக (ஙர்ள்ற் பன்ள்ற்ங்ழ் அஜ்ஹழ்க்) விளங்கி வருகிறது எல்.ஐ.சி.. பொதுத்துறை எல்.ஐ.சி_ஐ சீரழிக்க எல்.ஐ.சி. சட்டதிருத்த மசோதா மற்றும் இன்சூரன்ஸ் சட்டதிருத்த மசோதாவைக் கொண்டு வந்தது ம.ட.அ. மத்திய அரசு. அரசின் இந்நடவடிக்கைக்கு எதிராக நாடு முழுதும் மக்கள் சந்திப்பு இயக்கம், பிரதமருக்கு அஞ்சல் அட்டை அனுப்புவது, எம்.பி.க்களின் ஆதரவைத் திரட்டுவது என பல்வேறு இயக்கங்களை அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் மேற்கொண்டது. இதன் விளைவாக அரசு நினைத்த வடிவில் எல்.ஐ.சி. சட்டதிருத்த மசோதாவை நிறைவேற்ற இயலவில்லை. எதிர்வரும் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மத்திய அரசு இன்சூரன்ஸ் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை 26%லிருந்து 46%ஆக உயர்த்தவுள்ளது. எனவே, நடுத்தர மற்றும் உழைப்பாளி மக்களின் சேமிப்பைக் காக்கவும், நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்கவும், அனைத்து தரப்பு மக்களின் வலுவான எதிர்ப்பு அவசியம். அத்தகைய தேச நலன் காக்கும் போராட்டத்தில் சாதி, மத, இன பேதமற்று உழைப்பாளி மக்கள் ஓரணியில் திரண்டு பொதுத்துறை எல்.ஐ.சியைப் பாதுகாப்போம்! பலப்படுத்துவோம்! முன்னேறுவோம்.

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா