Friday 7 March 2014

மானநஷ்ட வழக்கு

Defamation


பிரேம் N..பிரேமராசன் B.Sc., B.L.

      ஒரு தனி மனிதனின் பெயருக்கும், புகழுக்கும், இழுக்கு வரும்போது போடும் வழக்குதான் `மானநஷ்ட வழக்கு'. இதன் பிரிவு `செக்ஷன்-499; செக்ஷன்-500' தண்டனையாகும். ஒருவர் புகழுக்கும், பெயருக்கும் களங்கம் ஏற்படுத்துவது சட்டப்படி குற்றமாகும். இதை பிரிவு 499 குறிப்பிடுகிறது.

      வழக்கு தொடுக்கும் முன் அவர் பயன்படுத்திய வார்த்தைகள், முறைகள் முக்கியமானவை. அப்போதுதான் வழக்கு வெற்றிபெறும். இது நேரிடையாக, மறைமுகமாக என இரு வகை. உதாரணமாக திருமணமாகாத ஒருவருக்கு எத்தனை குழந்தைகள் என்று கேட்பது ஈங்ச்ஹம்ஹற்ண்ர்ய். ரயிலில் டிக்கெட் பரிசோதகர் டிக்கெட் கேட்டால் அது ஈங்ச்ஹம்ஹற்ண்ர்ய் ஆகாது. இந்த வழக்கு போடும்போது வழக்கு தொடுப்பவர் மற்றவர் சொன்ன மான நஷ்ட வார்த்தைகள், பெயர், விலாசம் கொடுக்க வேண்டும். இதில் பப்ளிகேஷன், விளம்பரம் முக்கியம். இது இல்லையென்றால் அது ஈங்ச்ஹம்ஹற்ண்ர்ய் ஆகாது. அதாவது அவதூறு செய்தவர் அதை கடிதம், கைபேசி, தந்தி, தொலைக்காட்சி மூலம் அவ்வார்த்தைகளைக் குறிப்பிடுவது''
மான நஷ்ட வழக்கு இரண்டு வகைப்படும்.
1.  லைபல் (கண்க்ஷப்ங்) (நிரந்தரமானது),
2. ஸ்லான்டர் (நப்ஹய்க்ங்ழ்) (தற்காலிகமானது) பேசும் வார்த்தைகளை மட்டும் குறிப்பிடுவது
கீழ்க்காணும் குற்றம் நடவடிக்கைக்கு உரியது:
1.     ஒருவர் மற்றவரைத் திருடன் என்பது.
2.     ஒருவர் மற்றவரை நீ அவரிடம் செல்ல வேண்டாம்; அவருக்குத் தொற்று நோய் என்று கூறி அவரிடம் இருந்து பிரிப்பது.
3.     ஒருவரை லாயக்கு அற்றவன் என்பது. உதாரணம்: திறமையற்ற டாக்டர் என்பது.
4.     கடிதத்தில் நீ தவறானவன், திருடன், திருடி என்று குறிப்பிட்டு எழுதுவது - இது பப்ளிகேஷன்.
5.     செய்தித்தாள் நிருபர்கள் செய்திகள் வரும் போது அதை ஆராய்ந்து உண்மையை அறிந்து வெளியிட வேண்டும். இல்லாவிட்டால் அவரும், அந்தப் பத்திரிகை உரிமையாளரும் மானநஷ்ட குற்றத்துக்கு ஆளாவார்கள்.

      ஆக நிரந்தரமாக, வெளிப்படையாக, விளம்பரப்படுத்தப் பட்டவைகள் மான நஷ்ட வழக்குக்கு வலு சேர்க்கும் பிரிவு 499ன்படி இது குற்றம். வழக்கு வெற்றி பெறும்.

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா