T.ஓம்பிரகாஷ் 264/37094
ரெண்டு பணக்கார நண்பர்கள் பேசிக் கிட்டிருந்தாங்க.
ஒருத்தர் சொன்னாரு, ``என் வேலைக்காரந்தான் உலகத்திலேயே படு முட்டாள்''னு.
மறுத்த அடுத்தவர், ``வாய்ப்பே இல்ல, என் வேலைக்காரனப்
பத்தி தெரியாம சொல்றீங்க'' ன்னாரு.
சரி சோதிச்சு பாத்துடுவோம்னு சொல்லி,
மொத ஆளு தன்னோட வேலைக்காரனை கூப்பிட்டாரு.
பத்து பைசாவை கொடுத்து ``கடைக்கு போய், நல்லா
பாத்து இன்னோவா கார் ஒன்னு வாங்கிட்டு வா''ன்னாரு.
``சரிங்க
அய்யா'' ன்னு
பவ்வியமா வாங்கிட்டு போயிட்டான்.
``பாத்திங்களா,
என் ஆளு எப்படி, என்ன வாங்க சொன்னேன்னும் தெரியாது, பத்து பைசா செல்லுமான்னும் தெரியாது, ஆனா சொன்ன உடனே வாங்க கிளம்பிட்டான் பாருங்க'' ன்னாரு.
``கொஞ்சம்
பொறுங்க'' ன்னு
சொல்லி அடுத்தவர் அவரோட வேலைக்காரனை கூப்பிட்டாரு.
அவன் இன்னும் மொத ஆளவிட அதிகமான பவ்யமா வந்தான்.
``சொல்லுங்கைய்யா
என்ன செய்யனும்'' னான்.
``அவசரமான
விஷயம், வீட்டுல
போயி நான் இருக்கிறேனான்னு பாத்துட்டு வா'' ன்னாரு.
``உடனே
பாத்துட்டு வர்றேன்'' னு அவனும்
கிளம்பிட,
``பாத்திங்களா,
என் ஆள'' ன்னாரு.
மொத ஆளு ``எப்பா
உன் ஆளுதான் அருமை'' னு தோல்விய
ஒத்துகிட்டாரு.
அதே நேரம், வேலைக்காரங்க ரெண்டு பேரும் வழியில சந்திச்சிக்கிட்டாங்க.
ஏற்கனவே பாத்துகிட்டதனால,
ஒருத்தன் சிரிச்சுகிட்டே இன்னொருத்தன் கிட்ட,
``என் மொதலாளிய
மாதிரி முட்டாள் இந்த உலகத்திலேயே இல்ல'' ன்னான்.
``எப்படி
சொல்றே'' ன்னான்
அடுத்தவன்.
``பத்து
பைசாவ கொடுத்து என்னமோ வாங்கிகிட்டு வரச் சொல்றானே?, இன்னிக்கு ஞாயித்து கிழமை, கடை இருக்குமா?''
ன்னான்.
``அட அதாவது
பரவால்ல, மறந்து
போயி சொல்லியிருக்கலாம், ஆனா எங்க
ஆளு, அவரு
இருக்காரான்னு அவர் வீட்டிலேயே போயி பாத்துட்டு
வரனுமாம்.
அவருகிட்டதான் செல்போன் இருக்குல்ல,
போன் பண்ணி தெரிஞ்சுக்கலாம்ல'' ன்னான்.
No comments:
Post a Comment
கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா