Mobile: 97104 76927
மவுலிவாக்கம் கதை... ஏன் மௌனமான கதையானது?
அலமாதி _ ஏன் சமாதி ஆனது?
Vicarious Liability <பிறர் பொருட்டு பொறுப்பேற்கும்> சட்டம் என்ன சொல்கிறது?
மவுலிவாக்கத்தில் கட்டிடம் இடிந்து விழுந்து 61 பேர் பலியானதும், திருவள்ளூர் அலமாதியில் சுற்றுச்சுவர் இடிந்து 11 பேர் பலியானதும் மிகப் பெரிய சோகம்; இந்தக் கோர மரணத்துக்கு, கோர விபத்துக்கு யார் பொறுப்பு?
1984ல் போபால் விஷவாயு வழக்கில் முதலாளிகள் தப்பிக்கக்கூடாது என்பதற்காக இயற்றப்பட்ட சட்டம்தான்Vicarious Liability . இந்த வழக்கில் அந்த ஆலை நிர்வாகம் தான் முழுப் பொறுப்பு என்று தீர்ப்பு கூறப்பட்டது. மக்களைக் காப்பாற்ற, தவறு செய்பவர்கள் தப்பிக்காமல் இருக்க The environmental Act 1986, The Bhopal Disaster Act ஆகிய சட்டங்கள் இயற்றப்பட்டன.
இப்போது மவுலிவாக்கத்தில் 11 மாடி கட்டிடம் அப்படியே இடிந்து விழுந்து 61 பேரைக் காவு கொண்டது. இதுவரை சரியான நடவடிக்கை இல்லை. இதற்கு முழுப் பொறுப்பு கட்டிட உரிமையாளரும், கட்டிடம் கட்ட அனுமதி தந்த அதிகாரிகளும்தான்.
ஆகவே தார்மீகப் பொறுப்பை அரசே ஏற்று, இனிமேல் இம்மாதிரி சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். Vicarious Liability சட்டத்தைச் சரியாகப் பயன்படுத்த வேண்டும்.
No comments:
Post a Comment
கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா