Wednesday 21 January 2015

IS-ம் US-ம் ஒன்றே

கி.சுரேஷ் 
270\38313
சேசிஸ் அசெம்பிளி

ஒருவரை கை கால்களைக் கட்டிப் போட்டுவிட்டு, அவருக்கப் பின்னால் முழுக்க முகமூடி அணிந்திருந்த நபர் ஒருவர் அமர்ந்திருப்பவரின் கழுத்தை அறுத்து துடிக்கத் துடிக்க கொல்லும் காட்சிகளை வெளியிட்டு உள்ளது. ISIS (Islamic State of Iraq and Syria) சுருக்கமாக ஐந என்ற தீவிரவாத அமைப்பு.

வளைகுடா நாடுகளின் (Gulf Countries) ஆதாரமே எண்ணெய் வளம்தான். ஆனால், அவர்களுக்கு எமனும் அதே எண்ணெய் வளம்தான். எந்த நாட்டில் பார்த்தாலும் உள்நாட்டுக் கலவரங்கள், போர் என்று எப்போதும் அந்த மக்கள் அமைதி இன்றி வாழ்ந்து வருகின்றனர்.

ஈராக், ஈரான், சிரியா என்று நீண்ட பட்டியல் கொண்ட நாடுகளில் அங்குள்ள ஆட்சியாளர்களுக்கு எதிராகவும், சில நாடுகளில் ஆட்சியாளர்களுக்கு ஆதரவாகவும் உள்நாட்டு கலவரங்கள், கிளர்ச்சிகள் நடக்கின்றன; அல்லது நடத்தப்படுகின்றன. இதை பின்னால் இருந்து இயக்குவது அமெரிக்கா  மற்றும் பிரிட்டனின் கூட்டுப் படைகள் ஆகும். வளைகுடா நாடுகளின் எண்ணெய் வளத்தைக் குறி வைத்தும், அந்த நாடுகளில் தங்களின் சொல்படி கேட்கும் பொம்மை ஆட்சியை உருவாக்கவும், அமெரிக்கா ஆயுதம் வழங்கியும், பயிற்சி அளித்தும் பல்வேறு தீவிரவாத குழுக்களை உருவாக்குகிறது.

அமெரிக்க அதிபர்களின் முக்கிய வேலையே இதுதான். ஜிம்மிகாட்டர், ரோனால்ட் ரீகன், சீனியர் புஷ், ஜார்ஜ் புஷ் இன்றைய ஒபாமா வரை பயங்கரவாதக் குழுக்களை எண்ணெய் வளம் கொண்ட நாடுகளின் ஆட்சியாளர்களுக்கு எதிராக உருவாக்குகிறார்கள் <ஆதாரம் : Frontline July 2014>

முஜாகிதின்கள், தாலிபன்கள், அல்கைதா, இன்றைய ஐ.ந. வரை ஒவ்வொரு அதிபரின் காலகட்டத்தில் உருவானவை. இதற்கு அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ. துணை நிற்கிறது. அல்கைதாவில் இருந்து பிரிந்த அமைப்பே இந்த ஐநஐந என்ற அமைப்பு ஆகும். தேவைப்படும் வரை இந்தப் பயங்கரவாத அமைப்புகளை பயன்படுத்திவிட்டு, அவர்கள் விரும்பிய ஆட்சி வந்த பின்பு, இந்தப் பயங்கரவாத அமைப்புகள் அமெரிக்காவிற்கு எதிராக திரும்புகின்றனர். உடனே தீவிரவாதத்தையும், பயங்கரவாதத்தையும் ஒழிக்கிறோம் என்ற பெயரில் அப்பாவி முஸ்லீம் மக்களை அமெரிக்க மற்றும் பிரிட்டன் படைகள் கொன்று குவிக்கின்றனர்.

முஸ்லீம் மக்களை பிளவுப்படுத்தவும், கிளர்ச்சியாளர்களைத் தூண்டி விடவும் அமெரிக்கா பயன்படுத்தும் ஆயுதம், இஸ்லாம் மதத்தில் உள்ள பிரிவுகள்தான். இஸ்லாத்தில் பல்வேறு பிரிவுகள் இருந்தாலும், ஷியா, சன்னி என்ற பிரதான பிரிவுகள் உள்ளன. <இந்து மதத்தில் சைவம், வைணவம் போன்று>. நபிகள் நாயகத்தின் இறப்புக்குப் பிறகு, அவரது முக்கிய சீடரும், அவரின் மாமனாருமாகிய அபுபக்கரை அடுத்த கலிஃபாவாக <இஸ்லாமிய ஆட்சியாளர்> ஏற்றுக் கொண்டவர்கள் சன்னி பிரிவினர். நபிகள் அவர்களின் மருமகனாகிய அலியைதான் அடுத்த கலிஃபாவாக ஏற்போம் என்று சொன்னவர்கள் பின்னாளில் ஷியா பிரிவினராகக் கருதப்பட்டனர். இவர்களுக்குள் சிறு சிறு மத வேறுபாட்டைப் பயன்படுத்திக் கலகம் செய்து ஆதாயம் அடைகிறது அமெரிக்கா. இந்த உண்மையை ஊடகங்கள் மறைக்கின்றன. திட்டமிட்டு மறைத்து தீவிரவாதங்கள், பயங்கரவாதங்கள் எல்லாம் உருவாக்குவது முஸ்லீம் நாடுகளே என்று பரப்பி, ஐநஐந அமைப்பை இந்தியாவில் தொடங்கிவிட்டார்கள் என்று கூறி மத்திய உளவுத்துறை அப்பாவி முஸ்லிம்களை சிறையில் அடைத்து துன்புறுத்துகிறது. ஐநஐந அமைப்பின் ஜிகாத் <இஸ்லாம் ஆட்சியை உருவாக்குவது> கோஷத்தையும், அவர்களின் செயல்களையும் இந்தியாவில் உள்ள முஸ்லீம்களும், அதன் அமைப்புகளும் எதிர்க்கின்றனர். பயங்கரவாத அமைப்புகளை உருவாக்குவது அமெரிக்காதான் என்ற உண்மையை உரக்கச் சொல்வோம். அப்பாவி மக்களைக் காப்போம்!

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா