Thursday 26 December 2013

கே.கிருஷ்ணன் - வாழ்த்துச் செய்தி

கே.கிருஷ்ணன்
வடசென்னை மாவட்டச் செயலாளர்
                        இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)

தோழரே!
      அசோக் லேலண்ட் தொழிலகத்தில் உழைப்போர் உரிமைக்கழகம் சார்பில் வெளியிடப்படும் இரு மாத இதழான ``உரிமைக்குரல்'' பத்து வருடங்களாகத் தொடர்ந்து வருவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த இதழைத் தொடர்ந்து படிப்பது மட்டுமல்ல, அதன் மீது எனது கருத்துகளையும் ஆலோசனைகளையும் வழங்கி வருகிறேன்.
      ஒரு தொழிலகத்தில் தொழிலாளர்களால் இவ்வளவு சிறப்பாக ஒரு இதழை நடத்த முடியுமா என்று வியக்கும் வண்ணம் உங்களின் உரிமைக்குரல் இதழ் அமைந்துள்ளது. தொடர்ந்து மேலும் மேலும் உரிமைக்குரல் முன்னேறவும் மெருகேறவும் எனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் உரித்தாக்குகிறேன்.
                                         தோழமையுடன்

                                         கே.கிருஷ்ணன்
                           


No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா