Tuesday, 15 October 2013

காசு! பணம்! துட்டு! மணி!

அ.பன்னீர்செல்வம் 261/36354



பரந்த உலகில் வாழும் மனிதனை
பாடாய்ப்படுத்திடும் பணமே!
உயிரோட்டமில்லா வாழ்க்கையிலே
பகட்டுடன் வாழ்வதற்கே
பகடையென உருண்டோடி
சூதும் வாதும் உறவு கொள்ள
சுழலும் சக்கரமாய்
உருமாறிய பணமே!
காசில்லா மனிதனையும்
கடனாளி ஆக்கிவிட்டு
கைமாற்றாய்த் தருபவனை
கடவுளாய் காட்டிவிட்டு
முதலாளியிடம் சேரும் முழு பணமும்
அவரை அம்பானி ஆக்குதடா!
உழைப்பினைச் சுரண்டி
ஓரிடம் சேரும் பணம்...
நிலையான இன்பத்தை
ஒரு போதும் தருவதில்லை!

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா