அற்புதம் ஜேசுராஜ்
எவரெடி தொழிலகம்
குழந்தை பிறக்கும்பொழுது அதன் உடலில் 300 எலும்புகள் இருக்கும். ஆனால் வளர்ந்து
பெரியவனானதும் மொத்தம் 206 எலும்புகளே இருக்கும்.
நமது உடல் எடையில் 14% எலும்புகளால்
ஆனது.
நமது உடலில் உறுதியான எலும்பு
தொடை எலும்பு. அது கான்கிரீட்டை விட வலிமையானது.
நமது உடல் எடையில் 7% இரத்தம்
ஆகும். தினந்தோறும் 450 கேலன் இரத்தம் சிறுநீரகத்தால் சுத்தப்படுத்தப்படுகிறது.
பெண்களுக்கு சராசரியாக 4.5 லிட்டர்
இரத்தமும், ஆண்களுக்கு சராசரியாக 5.6 லிட்டர் இரத்தமும் இருக்கும். நமது உடலில் உள்ள இரத்த
சிவப்பணுக்களின் ஆயுட்காலம் 120 நாட்கள். அது போல் ஒவ்வொரு நொடியில் சுமார் இரண்டு மில்லியன்
இரத்த சிவப்பணுக்கள் நமது உடலில் இறக்கின்றன.
நமது கண்களின் எடை சராசரியாக
28 கிராம்
நமது கண்களுக்கு 500 விதமான
ஒளிகளைப் பிரித்தறியும் சக்தியுண்டு.
நமது கண்களில் உள்ள கருவிழி
மட்டும் தான் இரத்த நாளம் இல்லாத உயிருள்ள திசு. முதல் 8 வராம்
வரை குழந்தைகளின் கண்களில் கண்ணீர் வராது.
மனித இதயம் சராசரியாக ஒரு
வருடத்திற்கு 35 மில்லியன் முறை துடிக்கிறது. ஒரு சராசரி வாழ்வில் இதயமானது 2.5 பில்லியன்
முறை துடித்து 1 மில்லியன் பேரல் இரத்தத்தை இரத்தக் குழாயில் செலுத்துகிறது.
இதயத்தில் உள்ள இரத்த அழுத்தமானது
இரத்தத்தை 30 அடி வரை பீய்ச்சி அடிக்கும் சக்தி கொண்டது.
மனித மூளையில் சுமார் 100 பில்லியன்
நரம்பு செல்கள் உள்ளன.
ஒரு மனிதன் 35 வயது
அடைந்தது முதல் மூளையில் தினமும் 7000 நரம்பு செல்கள் இறக்கின்றன.
நாம் சுவாசிக்கும் மொத்த
ஆக்ஸிஜனில் 20% மூளைக்குச் செல்கிறது.
நமது மூளை 80% நீரால்
ஆனது.
நமது மூளையின் செயல்திறன்
பகலைவிட இரவில் அதிகமாக இருக்கும்.
இதைப் படித்தபின் நம் உடல் அதிசயம்தான் என்பது தெரிகிறதா?
No comments:
Post a Comment
கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா